வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

குரூப் 1 தேர்வு : 25 பணியிடங்களுக்கு 1.30 லட்சம் பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப் 1-க்கான முதற்கட்டத் தேர்வு, இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 33 மையங்களில் இன்று நடந்த குரூப் 1 முதல் நிலை தேர்வை 1.30 லட்சம் பேர் எழுதினர். 25 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (காலி பணியிடம் 8), போலீஸ் டிஎஸ்பி (4), வணிகவரித்துறை துணை ஆணையாளர் (7), மாவட்ட பதிவாளர் (1) மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி (5) ஆகிய 25 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 16ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...